கஞ்சா விற்ற 4பேர் கைது

சேலம், அக்.24: சேலம் அழகாபுரம் எஸ்.ஐ.கார்த்தி மற்றும் போலீசார் நேற்று பெரியபுதூர் அரசு மருத்துவமனை பகுதியில் ரோந்து சுற்றிவந்தனர். அப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்றனர். அப்போது சிலர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், கந்தம்பட்டி கோமாளி வட்டத்தை சேர்ந்த திருமூர்த்தி(31) நேசமணி(23), தைலானூரைச்சேர்ந்த சிவராமகிருஷ்ணன்(22) என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1.600 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது தாதகாப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடி வருகின்றனர். அதே போல ரெட்டியூரில் எஸ்.ஐ.சேகர் ரோந்து சென்றபோது, வலசையூர் மேட்டுத்தெருவை சேர்ந்த ரமேஷ்(22) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 400கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post கஞ்சா விற்ற 4பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: