தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.24: சேலத்தில் செந்தாரகை ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநகர தலைவர் பலராமன் தலைமை வகித்தார். இதில், பொதுச் செயலாளர் பாரதிதாசன், பொருளாளர் சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், சேலம் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஓட்டுநர் மற்றும் டிபிசி பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். சம்பள பட்டுவாடா சிலிப் வழங்க வேண்டும். 20சதவீத தீபாவளி போனஸ் வழங்கிட, பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். தூய்மை தொழிலாளர்களுக்கு வார விடுமுறை, ஆயுள் காப்பீடு ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

The post தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: