புதுகை கண்மாய்‌நீரினை பயன்படுத்துவோர்‌ சங்கத்துக்கு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தின் சிறந்த நீர் மேலாண்மை விருது: அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து

சென்னை: திருச்சி மண்டலம்‌, தெற்கு வெள்ளாறு உப வடிநிலப்பகுதியில், தமிழ்நாடு விவசாயிகள்‌ பாசன மேலாண்மை சட்டம்‌, 2001-கீழ்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர்‌பெரிய கண்மாய்‌நீரினை பயன்படுத்துவோர்‌ சங்கம்‌ சிறந்த நீர் மேலாண்மைக்கான ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தால்‌ வழங்கப்படும்‌ தேசிய நீர்‌ விருது 2023-ம் ஆண்டிற்கான 3வதாக தேர்வு செய்யப்பட்டு கடந்த 22ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் தலைமையில்‌ நடைபெற்ற விழாவில்‌ விருது பெற்றனர்‌.

இந்த விருதினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் அச்சங்கத்தின்‌ தலைவர்‌ பொன்னையா, ஆட்சி மன்ற உறுப்பினர்‌ பழனிசாமி மற்றும்‌ நீர்வளத்துறை செயற்பொறியாளர்‌ கனிமொழி ஆகியோர் வாழ்த்து பெற்றனர்‌. இந்நிகழ்வின் போது நீர்வளத்துறையின், அரசு கூடுதல்‌தலைமை செயலாளர்‌ மணிவாசன்‌, நீர்வளத்துறையின்‌ முதன்மை தலைமைப் பொறியாளர்‌ மன்மதன்‌ மற்றும்‌ உயர்‌ அதிகாரிகள் உடன்‌இருந்தனர்‌.

The post புதுகை கண்மாய்‌நீரினை பயன்படுத்துவோர்‌ சங்கத்துக்கு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தின் சிறந்த நீர் மேலாண்மை விருது: அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: