தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்தது இலங்கை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்பட உள்ளனர்.

The post தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்தது இலங்கை appeared first on Dinakaran.

Related Stories: