நீர்மேலாண்மைக்கான ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் விருதினை அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து

சென்னை: திருச்சி மண்டலம்‌, தெற்கு வெள்ளாறு உபவடிநிலப் பகுதியில், தமிழ்நாடு விவசாயிகள்‌பாசன மேலாண்மை சட்டம்‌, 2001-கீழ்‌தேர்ந்தெடுக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர்‌பெரிய கண்மாய்‌நீரினைப் பயன்படுத்துவோர்‌ சங்கம்‌ சிறந்த நீர் மேலாண்மைக்காண ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தால்‌ வழங்கப்படும்‌ தேசிய நீர்‌விருது 2023-ற்கு மூன்றாவதாக தேர்வு செய்யப்பட்டு 22.10.2024 அன்று புது தில்லியில்‌குடியரசுத் தலைவர்‌தலைமையில்‌நடைபெற்ற விழாவில்‌விருது பெற்றனர்‌.

இவ்விருதினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம்‌ காண்பித்து இச்சங்கத்தின்‌தலைவர்‌ ப. பொன்னையா, ஆட்சி மன்ற உறுப்பினர்‌ ரா. பழனிசாமி மற்றும்‌நீர்வளத்துறை செயற்பொறியாளர்‌ வே.கனிமொழி ஆகியோர் வாழ்த்து பெற்றனர்‌.

இந்நிகழ்வில்‌, நீர்வளத்துறையின், அரசு கூடுதல்‌தலைமைச் செயலாளர்‌ டாக்டர்‌ ௧.மணிவாசன்‌, நீர்வளத்துறையின்‌முதன்மை தலைமைப் பொறியாளர்‌ சா.மன்மதன்‌ மற்றும்‌ உயர்‌அலுவலர்கள்‌ உடன்‌ இருந்தனர்‌.

The post நீர்மேலாண்மைக்கான ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் விருதினை அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: