கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கோவை: கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சிவானந்தா காலனியில் செயல்படும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட்-ல் சோதனை நடைபெற்று வருகிறது. சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டூடியோ சாலையில் பொன்னுதுரை என்பவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். மேலும் உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் லட்சுமி டூல்ஸ் வரதராசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: