குடும்பத் தகராறு பெண் தற்கொலை

கரூர், அக். 23: கரூர் தாந்தோணிமலை அடுத்துள்ள பண்டுதகாரன் புதூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி (46). கடந்த சில நாட்களாக குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த பெண் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனலெட்சுமி கடந்த 21ம்தேதி, வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post குடும்பத் தகராறு பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: