ஒரு கட்டத்தில் சந்தியா தனது பெற்றோர் வசிக்கும் நெசப்பாக்கத்திற்கு சென்று விட்டார். இந்த நிலையில், கடந்த 2019 மார்ச் 30ம் தேதி சந்தியாவின் தாய் வீட்டுக்கு சென்ற அருள்குமார், அங்கிருந்த சந்தியாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து சந்தியாவின் தாயார் சரிதா அளித்த புகாரின் அடிப்படையில் எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்குமாரை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மதி முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.ஆரத்தி ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அருள்குமாருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post போதிய வருவாய் இல்லாததால் தகராறு காதல் மனைவியை குத்திக்கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.