தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் ராஜினாமா

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தங்களது தொழிலை மேம்படுத்தவும் மற்றும் சொந்த கடமைகளுக்காகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியில் இருந்த ரூபா குருநாத், தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். 2019ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் நியமிக்கப்பட்டார். இந்தியா சிமென்ட் நிறுவனத்தின் வாழ்நாள் இயக்குநரான ரூபா குருநாத், தொழிலை மேம்படுத்தும் நோக்கில் ராஜினாமா செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: