ஜார்க்கண்ட் புதிய டிஜிபியாக அஜய்குமார் சிங் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநில புதிய டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஜய்குமார் சிங்கை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ேபரவை தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநில பொறுப்பு டிஜிபியாக இருந்த அனுராக் குப்தாவை நீக்க அம்மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் கடந்த வாரம் உத்தரவிட்டது. முந்தைய தேர்தல்களில் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் டிஜிபி அனுராக் குப்தா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனுராக் குப்தாவுக்கு பதில் புதிய அதிகாரியை நியமிப்பதற்கு 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை அனுப்புமாறு மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.மாநில அரசு பரிந்துரைத்த 3 அதிகாரிகள் பட்டியலில் இருந்து அஜய் குமார் சிங்கை புதிய டிஜிபியாக தேர்தல் ஆணையம் நேற்று நியமித்துள்ளது. மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஜய்குமார் சிங் கடந்த 1989ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவு அதிகாரி ஆவார்.

The post ஜார்க்கண்ட் புதிய டிஜிபியாக அஜய்குமார் சிங் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: