சைலம் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆத்மகுரு மற்றும் மார்க்கபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலிகளைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கேமராவில் அவ்வப்போது விலங்குகள் நடமாட்டம் பதிவாகியுள்ளன. இந்நிலையில் சாலையில் புலியின் நடமாட்டம் வீடியோவை பார்த்த அப்பகுதி மக்களும், பக்தர்களும் பீதியடைந்துள்ளனர். புலி நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர், பக்தர்களுடன் சேர்ந்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீசைலம் மலைப்பாதை சாலையில் செல்லும் பக்தர்கள் இரவு நேரத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
The post ஆந்திராவில் சாலையில் சுற்றித்திரிந்த புலியால் பரபரப்பு: வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ பதிவு appeared first on Dinakaran.