போதைப்பொருட்கள் கடத்திய பெண் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்நிலையத்தில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுகரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றபோது பிளாட்பாரத்தில் சந்தேகப்படும்படி நடந்து சென்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் பகுதியை சேர்ந்த பவானி(35) என்பதும், அவரது பெட்டிக்கடையில் விற்பதற்காக பையில் குட்கா போதை பொருட்களை கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்து பவானியை கைது செய்த போலீசார், ₹15 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post போதைப்பொருட்கள் கடத்திய பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: