ரூ.1.07கோடியை மீட்க உதவிய மோப்ப நாய்

அகமதாபாத்: குஜராத்தில் விவசாயியின் வீட்டில் திருடு போன ரூ.1.07கோடி போலீஸ் நாயின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தின் கோத் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை ரூ.1.07கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இந்த பணத்தை கடந்த 10ம் தேதி வீட்டிற்குள் வைத்துள்ளார். பின்னர் 12ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேறு ஒரு இடத்தை வாங்குவது தொடர்பாக வெளியூர் சென்றதாக தெரிகின்றது. இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது ரூ.1.07கோடி திருடு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கோத் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கிருந்து சென்ற மோப்ப நாய் குறிப்பிட்ட இடத்தில் சென்று நின்றது. அங்கு இருந்த நபர் ஏற்கனவே சந்தேக பட்டியலில் இருந்ததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் புத்தா சோலாங்கி மற்றும் விக்ரம் சோலாங்கி ஆகியோர் சேர்ந்து விவசாயி வீட்டில் திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரது வீட்டிலும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பணத்தை போலீசார் மீட்டனர்.

The post ரூ.1.07கோடியை மீட்க உதவிய மோப்ப நாய் appeared first on Dinakaran.

Related Stories: