கடலூரில் இலஞ்சம் வாங்கிய DEO அலுவலக கண்காணிப்பாளர் கைது

கடலூர்: கடலூரில் இலஞ்சம் வாங்கிய DEO அலுவலக கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் முதுநகரில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் உயர்நிலை பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை விடுவிக்க கடலூர் மாவட்ட கல்வி அலுவலக (தனியார் பள்ளி) கண்காணிப்பாளர் கணேசன், பள்ளி உரிமையாளர் பாலசண்முகம் என்பவரிடம் ரூபாய் ₹25,000/- லஞ்சமாக பெற்றபோது கடலூர் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு ( பொறுப்பு) டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கடலூரில் இலஞ்சம் வாங்கிய DEO அலுவலக கண்காணிப்பாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: