விரைவு ரயிலில் மிடில் பெர்த் அறுந்து விழுந்து சிறுவன் படுகாயம்

மதுரை: கோவை, கவுண்டர் மில் பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ மனைவி புவிதா. இவரது மகன் ஜெய்சன் மோசஸ்(4). இருவரும் நாகர்கோவில் சென்று விட்டு, அங்கிருந்து கோவை செல்லும் ரயிலில் வந்து கொண்டிருந்தனர். எதிர்பாராவிதமாக ரயிலில் மிடில் பெர்த் திடீரென அறுந்து, தூங்கிக் கொண்டிருந்த சிறுவனின் நெற்றியில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

ரயிலுக்குள் முதலுதவி செய்யப்பட்ட பின், மதுரை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது, உடனடியாக அவர்கள் இறக்கி விடப்பட்டனர். பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

தொடர்ந்து சிறுவனை கோவையில் வைத்து சிகிச்சை செய்து கொள்வதாக கூறி பெற்றோர் அழைத்து சென்றனர். நேற்று அதிகாலையில் நடந்த இச்சம்பவத்தால் ரயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள், ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விரைவு ரயிலில் மிடில் பெர்த் அறுந்து விழுந்து சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: