நர்சிடம் பணம் பறித்த ஜோலார்பேட்டை வாலிபர் கைது வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பட்டப்பகலில்

வேலூர், அக்.17: வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் நர்சிடம் பணம் பறித்த ஜோலார்பேட்டை வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் வாணி(41), நர்சாக வேலை செய்து வருகிறார். இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக நேற்று வேலூர் பழைய பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தாராம். அப்போது அவரது பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென வேக வேகமாக சென்றாராம். இதனால் சந்தேகம் அடைந்த வாணி, தான் வைத்திருந்த பையை பார்த்தபோது அதில் இருந்த மணிபர்ஸ் காணவில்லை. அதில் ₹6 ஆயிரம் வைத்திருந்தாராம். உடனே வாணி, பஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அந்த வாலிபரை, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து சோதனையிட்டபோது தனது மணிபர்சை அந்த நபர் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொதுமக்கள், அந்த வாலிபரை வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் ேஜாலார்பேட்டை புதுகாலனி பகுதியை சேர்ந்த பிரபு(35) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து ₹6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ேமலும் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நர்சிடம் பணம் பறித்த ஜோலார்பேட்டை வாலிபர் கைது வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் appeared first on Dinakaran.

Related Stories: