மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஓ.எம்.ஆர்.சாலையில் தண்ணீர் நின்று விட்டது என நேற்றைய தினம் தொலைக்காட்சியில் காட்சி வெளியாகியது. இந்த நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ. வ.வேலு சென்னை மழையினால் பாதிக்கப்பட்ட ஓ.எம்.ஆர். சாலையில் கனமழையால் நீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘ஓ.எம்.ஆர்.சாலை, கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம் நெடுஞ்சாலைகளில் நீர் வெளியேற்றப்பட்டன.2 மணி நேரத்தில் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் போக்குவரத்து சீரானது. நெடுஞ்சாலை துறை சார்பாக 19 இடங்களில் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓ.எம்.ஆர். சாலையில் தண்ணீர் தேங்கியதற்கு மெட்ரோ பணிகள் நடந்து வருவதுதான் காரணம். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கிறோம்.

சென்னை மாநகராட்சியில் 270 கிலோ மீட்டர் சாலைகள், 347 சிறு பாலங்கள், புது பாலங்கள், 237 மழை நீர் வடிகால் கிரேன் இவைகளை நெடுஞ்சாலை துறை முலமாக நேரடியாக பராமரிக்கிறோம். மழைக்காலங்களில் நீர் தேங்காமல் இருக்க பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கி மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கிறோம். சென்னையில் உள்ள 6 சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கிவிடக்கூடாது என்பதற்காக 51 வாட்டர் பம்புகளை வைத்து நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து சீராக உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்காக 6 ஜெனரேட்டர்கள் வைத்து பராமரித்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

The post மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: