வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

 

பல்லடம், அக்.10: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகளில் பல்லடம் நெடுஞ்சாலைத்துறை தீவிரம் காட்டி வருகிறது.வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல்லடம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பேரிடர்களை உடனுக்குடன் எதிர்கொள்ளும் பொருட்டு, பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலகத்தில் மணல் மூட்டைகள், மரம் வெட்டும் இயந்திரம், சிறு தளவாடங்கள், சிவப்பு நிறக்கூம்புகள், அபாய எச்சரிக்கை தடுப்பான் மற்றும் ஜே.சி.பி இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பருவமழை காலத்தில் சாலைகளில் ஏற்படும் இடர்பாடுகளை சரி செய்ய சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என பல்லடம் உதவி கோட்ட செயற்பொறியாளர் செந்தில் அரசு, உதவி பொறியாளர் ஜான்சி ஆகியோர் தெரிவித்தனர்.

The post வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: