மாற்றுத்திறனாளி தற்கொலை: உடல்நலக் குறைவால் அவதி

திருப்போரூர்: சென்னை நாவலூர் அருகே தாழம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட காரணை கிராமத்தில் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் ராஜா (55), மாற்றுத்திறனாளி. இவர், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நோயின்வலி பொறுக்காமல் அவதிப்பட்டு வந்ததும், குடும்பத்தினரிடம் தன்னை கொன்றுவிடுங்கள் என்று கெஞ்சி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜா நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, தனது மூன்று சக்கர மோட்டார் சைக்கிளுக்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொளுத்திக்கொண்டார். அவரது, அலறல் சத்தம்கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் தீ முழுவதும் பரவி உடல் கருகி ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாழம்பூர் போலீசார், மாற்றுத்திறனாளி ராஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாற்றுத்திறனாளி தற்கொலை: உடல்நலக் குறைவால் அவதி appeared first on Dinakaran.

Related Stories: