மக்கள் குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராவுத்தநல்லூர் பகுதியில் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இடநெருக்கடி ஏற்பட்டு வருவதால் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எனவே தங்கள் பகுதியில் உள்ள ஏழைஎளிய மக்கள் இப்பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான தரிசு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்கள் வழங்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தனர். இந்த கூட்டத்தில் மேற்கூறிய பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பின்னர் மக்கள் குறைதீர்முகாமில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: