வடகிழக்கு பருவ மழையால் தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்கும் அபாயம்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2ம் சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகள் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும். இதைத்தொடர்ந்து அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்நிலையில், இம்முறை தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை பெய்தது. எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை என்ற போதிலும் அவ்வப்போது கனமழை பெய்தது.

இந்நிலையில், இரண்டாம் சீசனுக்கான ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மலர் அலங்காரங்களை தற்போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆனால், தற்போது நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால், ஊட்டியிலும் நாள்தோறும் மழை பெய்ய துவங்கியுள்ளது. இந்த மழையின் காரணமாக பூங்காவில் உள்ள மலர் செடிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேரிகோல்டு, டேலியா மலர்கள் மற்றும் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

The post வடகிழக்கு பருவ மழையால் தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: