வயநாடு செல்லும் நீலகிரி சிறப்புக் குழு..!!

உதகை: நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டால் உடனடியாக எடுக்க வேண்டிய மீட்பு பணி குறித்து அறிய சிறப்புக் குழு வயநாடு செல்கிறது. நீலகிரியில் இருந்து வயநாட்டிற்கு சிறப்புக் குழு செல்ல இருப்பதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தகவல் தெரிவித்துள்ளார். நீலகிரியில் நிலச்சரிவால் பாதிக்கப்படும் இடங்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் உள்ள மக்களை இரவு நேரங்களில் முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகாம்களை கண்காணிக்க 42 மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

The post வயநாடு செல்லும் நீலகிரி சிறப்புக் குழு..!! appeared first on Dinakaran.

Related Stories: