சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கட்டி வைத்து அடி, உதை

ஸ்ரீகாளஹஸ்தி: ஐந்து வயது சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அப்பகுதி மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள ஒரு தெருவில் 5 வயது சிறுமி நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாலிபர் அந்த சிறுமியை திடீரென தூக்கிச் சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அப்பகுதி இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் விரைந்து வந்தனர்.

அதற்குள் அந்த வாலிபர், அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அங்கு விரைந்து சென்ற மக்கள், அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். சிறுமியை மீட்டனர். பின்னர் அந்த வாலிபரை மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கட்டி வைத்து அடி, உதை appeared first on Dinakaran.

Related Stories: