தாம்பரம்: அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு
தாம்பரம் மாநகராட்சியில் மழை பாதிப்பு தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 18004254355, 18004251600 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு மழை பாதிப்பு புகார் அளிக்கலாம். மற்றும் புகார்களை 8438353355 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமும் தெரிவிக்கலாம். மீட்புப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளப்பாதிப்பு பணிகளை கண்காணிக்க மண்டலங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு: அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்கள் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1077, 044-27427412, 044-27427414 தொலைபேசி மற்றும் 9944272345 என்ற வாட்ஸ்அப் வழியே தொடர்பு கொண்டு மழை பாதிப்பு பற்றி புகார் அளிக்கலாம்.
The post வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை.. சென்னை மாநகராட்சி சார்பில் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.