வருகிற நாட்களில் வட கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடையும் :பிரதீப் ஜான் விளக்கம்

சென்னை : வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். அதில், “வடதமிழ்நாட்டின் மீது மேகத் திரள் சூழ்ந்துள்ளதால் சென்னையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நெருங்கி வரும். அக்.16, 17 தேதிகளில் சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற நாட்களில் வட கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடையும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வருகிற நாட்களில் வட கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடையும் :பிரதீப் ஜான் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: