20% போனஸ் அறிவிப்புக்கு டாஸ்மாக் பணியாளர் நன்றி

சென்னை: அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிப்பிற்கு டாஸ்மாக் பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு இந்த ஆண்டு போனசாக 8.33 சதவீதமும், 11.57 சதவீதம் கருணைத் தொகையும் சேர்ந்து 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நன்றி. அதே சமயம், அண்டை மாநிலமான கேரளாவில் மதுபான கடை பணியாளர்களுக்கு திருவோணம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை ரூ.95,000 வரை வழங்கப்படும் என்றும் இது கடந்த ஆண்டை விட 29.5சதவீதம் கூடுதல் என்று கணக்கிட்டு சுமார் ரூ.95 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு, மதுபான வியாபாரத்தில் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கும் குறைவான வருமானம் பெறும் அரசு பணியாளர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் வகையில் போனஸ் வழங்கியுள்ளது என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் ரூ.62 ஆயிரம் கோடி வரி வருவாயாக ஈட்டி தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 16,800/- மட்டுமே மிகை ஊதியம் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து கூடுதல் மிகை ஊதியம் வழங்க வேண்டும்.

The post 20% போனஸ் அறிவிப்புக்கு டாஸ்மாக் பணியாளர் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: