2வது முறையாக முதல்வராகிறார் சைனி அரியானா பாஜ அரசு வரும் 17ல் பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு

சண்டிகர்: அரியானாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜ 48 இடங்களில் வென்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரஸ் 37 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் 2 இடத்திலும் வென்றன. ஜேஜேபி, ஆம் ஆத்மி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதைத் தொட ர்ந்து, நயாப் சிங் சைனி தலைமையிலான புதிய பாஜ அரசு வரும் 17ம் தேதி பதவியேற்க உள்ளதாக ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் நேற்று தெரிவித்துள்ளார். அரியானா பொறுப்பாளரான அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பஞ்ச்குலா செக்டார் 5ல் உள்ள தசரா மைதானத்தில் வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும். பிரதமர் மோடியும் பங்கேற்பார்’’ என கூறி உள்ளார். விழாவில் நயாப் சிங் சைனி 2வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ளார்.

The post 2வது முறையாக முதல்வராகிறார் சைனி அரியானா பாஜ அரசு வரும் 17ல் பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: