சாலையில் கொடிக் கம்பம்: அரசு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: சாலையில் சட்டவிரோத கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் வைத்த கொடி கம்பங்களால் மிகுந்த சிரமம் என்றும், கொடிக் கம்பங்களை அகற்ற, உரிய விதிகளை வகுக்கக்கோரியும் 2 முறை அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை இல்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

The post சாலையில் கொடிக் கம்பம்: அரசு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: