ஆசிரியர் டூவீலர் அபேஸ்

 

அருப்புக்கோட்டை, அக்.10: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் சூரிய நாராயணன். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செம்பிலான் குடியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வேலைக்குச் செல்லும் போது தனது இருசக்கர வாகனத்தை யூனியன் ஆபீஸ் எதிரே உள்ள சர்ச் முன்பாக நிறுத்திவிட்டு செல்வார். நேற்று முன்தினம் டூவீலரை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்று மாலை திரும்பி வந்து பார்த்தபோது காணவில்லை. இது குறித்து சூரிய நாராயணன் அருப்புக்கோட்டை டவுன் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவது வாடிக்கையாக உள்ளது. இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆசிரியர் டூவீலர் அபேஸ் appeared first on Dinakaran.

Related Stories: