இருளர், மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு ரூ.3.45 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 405 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட இருளர் மற்றும் மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 45 ஆயிரத்து 518 ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post இருளர், மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு ரூ.3.45 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா appeared first on Dinakaran.

Related Stories: