மின்னல் தாக்கி கூலி தொழிலாளி பலி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, தொளவேடு கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(45). கூலி தொழிலாளி. இவர், பக்கத்து கிராமமான காக்கவாக்கம் கிராமத்திற்கு நாற்று நடும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து, பலத்த மழை பெய்துள்ளது. இதனால், ஆனந்தராஜ் உட்பட நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் அருகில் உள்ள குடிசையில் ஒதுங்கி நின்றனர்.

சிறிது நேரத்தில் மழை நின்றதையடுத்து ஆனந்தராஜ் ஒதுங்கி நின்ற குடிசையை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென மின்னல் தாக்கியதில் ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்ன வரதன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post மின்னல் தாக்கி கூலி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: