சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக விரைந்து தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் இணைந்து பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே நடந்த பேச்சில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் அமைச்சர்கள் தலையிட்டு தீர்வு காண அறிவுறுத்தியுள்ளார். முதல்வர் அறிவுறுத்தலை தொடர்ந்து திங்களன்று தொழிலாளர்கள், நிறுவனத்திடம் அமைச்சர்கள் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

The post சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: