போதையில் காரை ஓட்டி விபத்து கேரள நடிகை மீது வழக்கு: மது பாட்டில்கள் பறிமுதல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே வெஞ்சாரமூடு பகுதியை சேர்ந்தவர் ரஜிதா(31). டிவி நடிகை ஆவார். ஏராளமான மலையாள தொடர்களில் நடித்து உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தனது நண்பரான ராஜு(49) என்பவருடன் காரில் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் அருகே சென்று கொண்டு இருந்தார். காரை ரஜிதா தான் ஓட்டினார்.

குளநடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னொரு கார் மீது மோதியது. அதன் பிறகு காரை எடுத்துச் சென்றவர், சிறிது தூரம் சென்ற பிறகு வேறு ஒரு லாரி மீது மோதினார். இதுகுறித்து பந்தளம் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நடிகை ரஜிதா குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரது காரில் இருந்து மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.

The post போதையில் காரை ஓட்டி விபத்து கேரள நடிகை மீது வழக்கு: மது பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: