அந்தியூர் அருகே எலிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலியான நிலையில் மருத்துவக் குழுவினர் முகாம்

ஈரோடு: அந்தியூர் அருகே எலிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலியான நிலையில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். சிறுவன் வசித்த பகுதியில் மருத்துவக் குழு முகாமிட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. காட்டூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சைபெற்ற நிலையில் உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண்ணும் எலிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post அந்தியூர் அருகே எலிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலியான நிலையில் மருத்துவக் குழுவினர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: