பேருந்து நிறுத்தம் சீரமைப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருந்து பழவேற்காடு செல்லும் வழியில் ஆண்டார் மடம், சிறு பழவேற்காடு, கடப்பாக்கம், தாங்கள் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள், ஆண்டார் மடம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி நோக்கி செல்லும் அரசு மற்றும் தனியார் ஷேர் ஆட்டோக்களில் சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பேருந்து நிறுத்தத்தில் முட்செடிகள் வளர்ந்திருந்தது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு 4 கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து படத்துடன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பேருந்து நிறுத்தத்தில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றினர்.

The post பேருந்து நிறுத்தம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: