இதனால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் பல்வேறு பேருந்துகளில் செய்யூர் வந்து இறங்கி, பின்னர் அங்கிருந்து எல்லையம்மன் கோயில் பகுதி வரை ஷேர் ஆட்டோக்கள், பேருந்துகளில் சென்று, அங்கிருந்து புதுச்சேரி பேருந்துகளை பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல்வேறு தேவைகளுக்காக புதுச்சேரி செல்லும் பயணிகள் சோர்வடைவதுடன் கால விரயம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே, செய்யூரில் இருந்து புதுச்சேரிக்கு நேரடி அரசு பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டால், கால விரயம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று திரும்பவும் முடியும் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, செய்யூர் – புதுச்சேரி இடையே நேரடி அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.
The post செய்யூர் – புதுச்சேரி இடையே அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.