சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கன்னியாகுமரி கடற்கரையில் தூய்மை பணி

கன்னியாகுமரி, செப்.20: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், பிரம்மகுமாரி அமைப்பு சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் தூய்மை பணி நடைபெற்றது. பிரம்மகுமாரி அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகிலா தலைமை வகித்தார். சுற்றுலா அலுவலர் காமராஜ் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயக்குமாரி, சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுதாமதி மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கன்னியாகுமரி கடற்கரையில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: