நித்திரவிளை அருகே சாலையோர டிபன் சென்டரில் நள்ளிரவு திடீர் தீ

நித்திரவிளை, செப். 20: நித்திரவிளை அருகே நம்பாளியை சேர்ந்தவர் அபு தாகீர் (42). நடைக்காவு சாலையில் வீட்டின் அருகே சாலையோரத்தில் டிபன் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்று உள்ளார். இந்தநிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் கடையின் மேல் பகுதியில் திடீரென தீ பிடித்து எரிந்து உள்ளது. இதை பார்த்த அபு தாகீர் கொல்லங்கோடு தீயணைப்பு நிலையம், நித்திரவிளை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொல்லங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்து உள்ளனர். இதனால் பக்கத்தில் உள்ள வீடுகளில் தீ பரவுவது தடுக்கப்பட்டது. அடுப்பிலிருந்து பறந்த தீ கனல் தான் கடை தீ பிடித்து எரிய காரணம் என்று கடை உரிமையாளர் தெரிவித்தார்.

The post நித்திரவிளை அருகே சாலையோர டிபன் சென்டரில் நள்ளிரவு திடீர் தீ appeared first on Dinakaran.

Related Stories: