திராவிடர் கழக கொடியேற்றுவிழா

நாகர்கோவில், செப்.20: குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர்கழகக் கொடியேற்று விழா வெள்ளமடம் கிறிஸ்து நகரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் திராவிடர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். திராவிட நட்புக் கழக பொறுப்பாளர் விஷ்ணு, இளைஞரணி செயலாளர் அலெக்சாண்டர், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் குமாரதாஸ், தோவாளை ஒன்றிய தலைவர் ஆறுமுகம் கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் யுவான்ஸ், மணிமேகலை, பால்மணி, பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திராவிடர் கழக கொடியேற்றுவிழா appeared first on Dinakaran.

Related Stories: