‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி


திருப்பூர்: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை’ என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். அந்த மகிழ்ச்சியான அறிவிப்பு எப்போது வெளிவரும் என எதிர்பார்த்து உள்ளோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. குறிப்பாக திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பவளவிழா கொண்டாடி வரும் திமுக, மக்கள் ஆதரவுடன் நூற்றாண்டு விழாவும் காணும்.

பொதுமக்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு என்ற வகையில் வாக்களித்து அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்துள்ளனர். யார் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவின் பணி வழக்கமான வகையில் நடைபெறும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு’ ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாகாது. இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

The post ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: