தூத்துக்குடியில் பிரபல ஜூவல்லரியில் ஷட்டர் லாக் ஆனதால் கடைக்குள் சிக்கிய பொதுமக்கள், ஊழியர்கள் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

தூத்துக்குடி, செப். 19: தூத்துக்குடியில் பிரபல ஜூவல்லரியில் ஷட்டர் லாக் ஆனதால் கடைக்குள் சிக்கிய பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி., ரோட்டில் உள்ள பிரபல ஜூவல்லரியில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஷட்டரின் ஹைட்ராலிக் க்ளோசர் கட்டானது. இதனால் கடையின் ஷட்டர் எதிர்பாராதவிதமாக மூடியது. இதன் காரணமாக கடைக்குள் இருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்து ஷட்டரை உடைத்து திறந்து அங்கு சிக்கியிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post தூத்துக்குடியில் பிரபல ஜூவல்லரியில் ஷட்டர் லாக் ஆனதால் கடைக்குள் சிக்கிய பொதுமக்கள், ஊழியர்கள் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: