அஞ்சல்துறையில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி டிசம்பர் 14ம் தேதி வரை நடக்கிறது

நாகர்கோவில், செப். 19: கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல்துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி முதல் டிசம்பவர் 14ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு அனைத்து வயதினரும் வரவேற்கப்படுகின்றனர். போட்டிக்கான கடிதத்தை எழுதுவதில் மகிழ்ச்சி, டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The post அஞ்சல்துறையில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி டிசம்பர் 14ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: