பணகுடியில் கஞ்சா விற்ற பெண் உள்பட இருவர் கைது

நெல்லை,செப்.19: பணகுடி எஸ்ஐ ஸ்டீபன் மற்றும் போலீசார் சர்வோதயா தெருவில் ரோந்துசென்றனர். இதில் பழைய செங்கல் சூளை அருகே நின்றிருந்த 5 பேரில் 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். பிடிபட்ட இருவரிடம் விசாரித்தபோது பணகுடி அழகியநம்பியாபுரத்தை சேர்ந்த ஜோசப் அஜய் சுதர்சன் (19), சிவகாமிபுரம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த இசக்கியம்மாள் (40) என்பதும் பதுக்கிவைத்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார், இருவரிடம் இருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

The post பணகுடியில் கஞ்சா விற்ற பெண் உள்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: