சாலை விரிவாக்க பணி ஆய்வு

காரிமங்கலம், செப்.18: காரிமங்கலம் பகுதியில் நடந்து வரும் சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் ஆய்வு செய்தார். மொரப்பூர்-மாரண்டஅள்ளி இடையில் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அகரம் ரோடு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது பாலக்கோடு உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்க்கரசி, உதவி பொறியாளர் ரஞ்சித்குமார், ஆய்வாளர் வில்லியம் அந்தோணி உடனிருந்தனர்.

The post சாலை விரிவாக்க பணி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: