சாத்தூர் அருகே நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரம்

சாத்தூர், செப்.17: சாத்தூர் அருகே ஜவுளி பூங்காவிற்கு நான்குவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சாத்தூர் அருகே இ.குமாரலிங்காபுரத்தில் உள்ள சிப்காட் நிலத்தில் 1052 ஏக்கரில் பி.எம் மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக கன்னியாகுமாரி மதுரை நான்கு வழிச்சாலையில் இருந்து இ.குமாரலிங்காபுரம் செல்லும் சாலை ஒருவழித்தடமாக இருந்ததை நெடுஞ்சாலைதுறையின் சார்பில் 30 மீட்டர் அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை விருதுநகர் மாவட்ட கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி கோட்டப்பொறியாளர் கணேசன் பார்வையிட்டனர். இந்த சாலை பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் அருகே உள்ள மணிப்பாறைபட்டி, துலுக்கப்பட்டி, முதலிபட்டி, சின்னையாபுரம், முத்துசாமிபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறுவர்.

The post சாத்தூர் அருகே நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: