நம்பர் 1 தீவிரவாதி ராகுல்: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை

பாகல்பூர்: அமெரிக்காவுக்கு சமீபத்தில் சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சீக்கியர்கள் பற்றி தெரிவித்த கருத்துக்கு ஒன்றிய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு நேற்று அளித்த பேட்டியில், ‘‘முதலில் முஸ்லிம்களைப் பயன்படுத்த முயன்றனர். அது நடக்கவில்லை. இப்போது சீக்கியர்களை பிரிக்க முயற்சிக்கின்றனர்.

இதற்கு முன்பு நாட்டில் தேடப்படும் முக்கிய தீவிரவாதிகள் தான் இதுபோன்று பேசியுள்ளனர். தீவிரவாதிகளாக இருப்பவர்களும் ராகுலின் கருத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்டவர்கள் ராகுல் காந்தியை ஆதரிக்கும் போது, அவர்தான் நாட்டின் நம்பர்-1 தீவிரவாதி. பெரும்பாலான நேரத்தை ராகுல் இந்தியாவிற்கு வெளியே செலவிடுகிறார். அவர் இந்தியரே கிடையாது’’ என்றார்.

The post நம்பர் 1 தீவிரவாதி ராகுல்: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: