சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ₹10.81 லட்சம் உண்டியல் வசூல்

சுசீந்திரம், செப்.14: சுசீந்திரத்தில் பிரசித்திபெற்ற தாணுமாலயன் சுவாமி கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு இங்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோயிலில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்களை 2 மாதத்துக்கு ஒருமுறை திறந்து காணிக்கை பணத்தை எண்ணுவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை இந்த 11 உண்டியல்களையும் கோயில்களின் இணை ஆணையர் பழனி குமார், இந்து சமய அறநிலை துறை அறங்காவல் குழு தலைவர் பிரபா  ராமகிருஷ்ணன், அறங்காவல் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், கோயில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் திறந்து கோயில் ஊழியர்கள் எண்ணினர். இதில் வருவாயாக 10 லட்சத்து 81 ஆயிரத்து 63 ரூபாயும், 5 கிராம் தங்கம், 8 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்தன.

The post சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ₹10.81 லட்சம் உண்டியல் வசூல் appeared first on Dinakaran.

Related Stories: