ராணுவ அதிகாரிகளை தாக்கி தோழி பலாத்காரம் மபியில் 6 பேர் கும்பல் கைது

இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் ராணுவ அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்துவிட்டு, தோழியை பலாத்காரம் செய்தது தொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் மோவ் மிலிட்டரி கன்டோன்மென்ட் பகுதியில் பயிற்சி எடுத்து வரும் 2 ராணுவ அதிகாரிகள் தங்கள் தோழிகளுடன் 10ம் தேதி நள்ளிரவு பிரபல சுற்றுலாத்தலமான ஜாம் கேட் சென்றனர்.

மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த இடத்தில் நள்ளிரவு நேரத்தில் வந்த கும்பல், ராணுவ அதிகாரிகளை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு, அவர்களது தோழியை துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டுபலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோஹித் கிர்வால் (23), சந்தீப் வாரியா (18), சச்சின் மக்வானா (25) , அனில் பரோர் (27), பவன் பன்சுனியா (23), ரித்தேஷ் பாபர் (25) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

The post ராணுவ அதிகாரிகளை தாக்கி தோழி பலாத்காரம் மபியில் 6 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.

Related Stories: