மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட விடுதியை இடிக்க மாநகராட்சி உத்தரவு..!!

மதுரை: மதுரை கட்ராபாளையத்தில் தீ விபத்து ஏற்பட்ட விசாகா பெண்கள் விடுதிக் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. விடுதிக் கட்டடம் முறையான அனுமதி பெறாமலும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மகளிர் தங்கும் விடுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த விடுதிக் கட்டடத்தை அகற்ற கடந்த 2023-ம் ஆண்டு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

The post மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட விடுதியை இடிக்க மாநகராட்சி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: