கல்யாண ராணி சத்யாவை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் கல்யாண ராணி சத்யாவை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக சத்யா மீது அரவிந்த் என்பவர் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை அடுத்து புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 60 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என கோரி சத்யா ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் சந்தியாவை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post கல்யாண ராணி சத்யாவை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: